கடலை போடும் விடலை இருக்கும் வரை கடலை விற்கும் சிறுவனும் இருப்பான் !
பேரலைகள் எழுப்பும் சப்தமும் மனித அலைகளின் சப்தமும் சண்டை போடும் இடத்திலும் அமைதி எங்கே ?
மணல் கொள்ளை நடக்கும் ஆற்றங்கரையில் காவலரை காணோம் கடற்கரையில் என்னத்தை இவங்க கிழிக்குறாங்க ?
அலையோடு ஆடி கால் நனையாமல் கரையேறினால் இன்னும் அலை வந்து வந்து சென்று கொண்டிருக்கிறது அப்போ நான் வெற்றி பெறவில்லையா ?
எல்லை மீறி அலைகள் அவ்வப்போது வந்தாலும் எல்லை மீறுவது அவற்றுக்கு தெரியுமோ ?