பையனை தூங்க வைக்க கதை சொல்லலாம்னு ஆரம்பிச்சேன் !
அப்பா கதை சொல்லவா?
ம்ம்
(நாம் முதன்முதலாக கேட்ட அதே பாட்டி கதையை சொல்ல ஆரம்பித்தேன்)
ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க
ம்ம்ம் காக்கா காக்கா
ஆமாம் ஆமாம் ... மரத்துல ஒரு காக்கா இருந்துச்சு...
ம்ம்ம் கொக்கு கொக்கு
கொக்கா? ( இப்போ பாட்டி வடை சுட்ட கதைல கொக்கு வரணுமா? )
ஆமாம் மரத்துக்கு கீழ ஒரு குளம் இருந்தது , அங்க ஒரு கொக்கு ஒத்தை கால்ல நின்னுச்சு ...
பாட்டி வடை சுடுவதற்காக தண்ணி பிடிக்க போனாங்க...
ம்ம்ம்
அப்போ காக்கா சொயுன்னு பறந்து அந்த குடத்தை குளத்துக்குள்ள தள்ளி விட்டுடுச்சு ...
பாட்டி அழ ஆரம்பிச்சுட்டாங்க ...
அதை பார்த்த கொக்கு ,, தண்ணிக்குள்ள போய் அந்த குடத்தை எடுத்து வந்து கொடுத்துச்சு....
ம்ம்ம்
பாட்டி அதை எடுத்துட்டு போய் மாவு பிசைய தண்ணி எடுத்தாங்க.. பார்த்த.. அதுல ஒரு விலை மதிப்பில்லா நகை இருந்துச்சு......
அதை வித்துட்டு பாட்டி இப்போ பெரிய கிளப் கடை ஆரம்பிச்சுட்டாங்க , அப்புறம் சந்தோசமாக இருந்தாங்க .....
(அப்புறம் என்ன அதுக்கு அப்புறம்... இன்னும் நெறைய கதை எட்டுகட்டி சொல்ல வேண்டியதாயிற்று)