Monday, March 14, 2011

அவர்கள் சுறுசுறுப்பானவர்கள்
உழைப்பையே உணவாக உண்பவர்கள்
இரத்தத்தை வியர்வையாய் சிந்தி
எழுப்பினர் வானுயர்ந்த கட்டிடங்கள்

தத்தக்கா பித்தக்கா என்று
ஓரிரு அடி வைத்து குப்புற
விழுந்தது அதன் வாயில்
வழிந்தது எச்சில் அதனில்
கவர்ந்த மக்கள் அதன்
காலடி சென்றனர்

மீண்டும் அவர்கள் கட்டடங்கள்
சுறுசுறுப்பாக எழுப்புவார்கள்
அக்குழந்தை மீண்டும் மறு
அடி எடுத்து வைக்கும் !


No comments: