புரண்டு புரண்டு படுத்து இருந்தேன்
துயரம் நீங்கவில்லை தூக்கம்
இன்னுமில்லை!
காலங்கள் பல கடந்தன
நாடகங்கள் நடந்தேறின
தூங்கி தூங்கி எழுந்திருந்தேன்
காலை வந்தது கனவது கலைந்தது
காலவெளி அங்கில்லை! கண்முன்னே
பல மணித்துளிகள் அத்துயரம்
இப்போதில்லை மறு உறக்கம்
வரும் வரை அரங்கேறுவது
எத்தனையோ!
ஓர் உறக்கம் கழித்து
தொக்கி நிற்பவை சில
நினைவுகளே !
பேருறக்கம் வந்து
பெருந்துயரம் நீக்குமோ
காலவெளி எதுவுமின்றி
கனவுமின்றி நினைவுமின்றி
நட்சத்திரமாய் மாறி
பேரானந்தத்தில் திளைத்திருக்க!
No comments:
Post a Comment