ஆனந்த கூத்தாடியது அவைகள்
முன்னும் பின்னும்
மேலும் கீழும்
கண்டதில்லை இவ்வளவு வேகத்தை
ஆனாலும் அஞ்சிவிடவில்லை
ஆனந்த கூத்தாடியது அவைகள்
இலைகளை உதிர்த்தன
கிளைகளை உதிர்த்தன
தன்னையே உதிர்த்தன
கூட்டம் கூட்டமாக சாய்ந்தன
ஆனந்த கூத்தாடியது அவைகள்
ஓயவில்லை ஆட்டம்
குறையவில்லை கூச்சல்
எல்லாம் ஓய்ந்ததும்
வரிசையில் நின்றார்கள் இவர்கள்
சூறை காற்று சூறையாடியதுக்கு
நிவாரண நிதி வேண்டி
அவைகளிடம் சொல்லி விடாதீர்கள்
மீண்டும் காற்றை வேண்டி
கடுந்தவம் இயற்றி விடும் !
No comments:
Post a Comment