Friday, December 30, 2011

கடுந்தவம் இயற்றி விடும்

ஆனந்த கூத்தாடியது அவைகள்

முன்னும் பின்னும்

மேலும் கீழும்

கண்டதில்லை இவ்வளவு வேகத்தை

ஆனாலும் அஞ்சிவிடவில்லை

ஆனந்த கூத்தாடியது அவைகள்

இலைகளை உதிர்த்தன

கிளைகளை உதிர்த்தன

தன்னையே உதிர்த்தன

கூட்டம் கூட்டமாக சாய்ந்தன

ஆனந்த கூத்தாடியது அவைகள்

ஓயவில்லை ஆட்டம்

குறையவில்லை கூச்சல்

எல்லாம் ஓய்ந்ததும்

வரிசையில் நின்றார்கள் இவர்கள்

சூறை காற்று சூறையாடியதுக்கு

நிவாரண நிதி வேண்டி

அவைகளிடம் சொல்லி விடாதீர்கள்

மீண்டும் காற்றை வேண்டி

கடுந்தவம் இயற்றி விடும் !

No comments: