Tuesday, November 08, 2011

மழை காலம்


அலுவலகம் நுழைந்ததுதான் தாமதம்
ஏன் இந்த மழை பெய்கிறது என்றான்
ஏன் என்றேன்
குண்டும் குழியான சாலைகளில்
நிமிடத்திற்க்கு ஒரு முறை கியர் மாற்றி
மழையில் நனைந்து கொண்டே
வாகன நெரிசலில் ஊர்ந்து வருவதற்க்குள்
உயிரே போய் விடுகிறது என்றான் !
குண்டு மழையில் நனைந்து
அடுத்த அடியில் கால் போகுமோ கை போகுமோ
என ஓடி உயிர் பிழைத்து வாழ்கிறார்களே
அவர்களின் நிலை நினைந்து இருக்கிறாயா என்றேன் ?
எல்லாம் அவன் வழி என கை உயர்த்தி
தலை கோதி நின்றான் !
காபி என்றான் கண்டிப்பாய் என்றேன்!

No comments: