Thursday, April 28, 2011

கதம்பம் 4

அவை ஒழுங்காக நின்றன
ஒன்றையொன்று ஈர்த்தும்
ஒன்றையொன்று விலக்கியும்
அவற்றில் ஒன்று தான்
பெருதென்றெண்ணி விலகி சென்றது
இப்பொழுது அவைகள் தான்
தான் என்று ஈர்த்தும் விலகியும்
விலகியும் ஈர்த்தும் தன்
பயணத்தை தொடர்கின்றன
அவற்றில் ஒன்று தான்தான்
எல்லாம் என்று ஆகும்
வரை இது தொடரும் !


----------------------------------------------------------


மௌனங்கள் சொல்லாததை
சொல்ல முனைந்திட்ட
வார்த்தைகள் மௌனித்து
நின்றன !

No comments: