Tuesday, January 31, 2012

இருட்டினில்

பழகி பழகி

பேதம் தெரியவில்லை

அவனுக்கு புலப்பட்டன

பல விஷயங்கள்

அவனுக்கு முன்னால்

அங்கிருந்தவன் கண் மூடி

இருந்திருந்தான் கண்

திறந்ததும் "

நான் வெகு நாளாக இருக்கிறேன்

எனக்கு புலப்படாத

விஷயங்கள் இவனுக்கு எப்படி?"

என உருவாக்கி கொண்டான் பல பல ,

இப்பொழுது

இருவருக்கும் குழப்பம்

அங்கு எது உள்ளது எது

இல்லையென்று

இப்பொழுது

அங்கு இருக்கும் எதுவும் அங்கு இல்லை

அங்கு இல்லாத பல அங்கு உண்டு

ஆம் அவர்கள் இருட்டுக்குள் சிக்கி

விட்டனர் இருட்டினில் !

No comments: