என்னை எழுதென்று
வந்து நின்றாய்
ஆதி எங்கே
அந்தம் எங்கே
என தெரியாமல்
விழித்தேன்
வார்த்தைகள் விக்கித்து
நின்றன, மறந்தன
மழலை மொழியாய்
மாறியன!
முயற்சித்தேன்
தவமிருந்தேன்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
வார்த்தைகள் வந்து
மோதின !
சீர் தூக்கி சேர்த்தேன்
சிதறி விழுந்ததலிருந்து!
எழுதி முடிக்கையில்
விலகி சென்றாய்
எனதருமை கவிதையே !
1 comment:
Good one :)
Post a Comment