Tuesday, January 31, 2012

எனதருமை கவிதையே

என்னை எழுதென்று

வந்து நின்றாய்

ஆதி எங்கே

அந்தம் எங்கே

என தெரியாமல்

விழித்தேன்

வார்த்தைகள் விக்கித்து

நின்றன, மறந்தன

மழலை மொழியாய்

மாறியன!

முயற்சித்தேன்

தவமிருந்தேன்

அங்கொன்றும்

இங்கொன்றுமாய்

வார்த்தைகள் வந்து

மோதின !

சீர் தூக்கி சேர்த்தேன்

சிதறி விழுந்ததலிருந்து!

எழுதி முடிக்கையில்

விலகி சென்றாய்

எனதருமை கவிதையே !

1 comment:

Damu said...

Good one :)