Tuesday, January 31, 2012

நகுலன் பாணி ?

நேரில் வந்தவர்கள்

கனவிலும் வந்தார்கள்

கண்டது கனவா

காண்பது கனவா !

----------------


என்னை பற்றி

தான் அவன் பேசி

கொண்டிருந்தான்

என்னிடம் தான்

பேசி கொண்டிருந்தான்

அவனை பற்றி

தான் பேசி கொண்டிருந்தேன்

அவனிடம் தான்

அவனும் நானும்

ஒன்றா வெவ்வேறா ?

No comments: