Thursday, October 11, 2012

திரும்ப படிக்கவும் - 3

சக்தி வாய்ந்த யானை ஒன்று சிறிய இரும்பிகயிற்றுக்கு பயந்து நிற்பது போல் நின்று கொண்டிருந்தன ... சக்தி வாய்ந்த இயந்திரங்கள் ...சிறிய சிகப்பொளிக்கு அஞ்சி ..... நேரம் மெதுவாக கடந்து கொண்டு இருந்தது நொடி காட்டி ஒன்று ரெடி செய்து கொண்டு இருந்தது... நகரத்து சாலை ஒன்றில் ... சுற்றும் முற்றும் பார்த்து ...மரத்துக்கு நீர் பாய்ச்சி கொண்டு இருக்கும் யுவன் ஒருவன்... கண்கள் நர்த்தனமாட முன்னால் அமர்ந்திருப்பவனுக்கு காதில் விழுமே இல்லையே என்றொரு கவலை இல்லாமல் .. .கதைத்து கொண்டு இருந்தால் யுவதி ஒருத்தி ....நீர் பாய்ச்சியவன் ... மூன்று நொடிகள் இருக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து வண்டியை முடுக்க ஆரம்பிக்க... பொறுமையில்லாமல் ... அனைவரும் முடுக்க...அனைவரும் முடுக்க ஸ்தம்பித்து நின்றது சாலை... வெள்ளை சீருடை அணிந்தவர் ... விளக்கை அணைத்து ...விசில் ஆரம்பித்து இருந்து இருந்தார்.. பேருந்து ஓட்டுனர் .. முடுக்க ஆரம்பிக்க வண்டி திணறி திணறி சென்று கொண்டு இருந்து இயந்திரத்திரலில்.. எந்த வித பதற்றமுமின்றி ... எதையும் கவனிக்காமல் கடலை போட்டு கொண்டு இருந்தனர் இருவர் ... அவன் என்ன சொன்னாலும் ஒரு நீண்ட சிரிப்புதான் இவள் கேட்டு கொண்டு இருந்தால்... இவள் சிரிக்கும் முன்னே அவன் சில நேரத்தில் ஆரம்பித்து கொண்டு இருந்தான் ...என்ன வழக்கம் போல தான் இவர்கள் பேசும் .. என்ன வழக்கம் என்றும் ஆராயும் நேரத்தில் .. இங்கு வந்திருப்பீர்கள்... இங்கு எப்போதும் யாருக்கும் நீங்கள் பெயர் வைக்க வேண்டியது இல்லை.. .. இவன் பெயர் R. அவன் பெயர் S . இவனும் அவனும் செல்லும் இடம் P. அவர்கள் சென்ற போது சந்தித்த நபர்கள் X, Y. அவர்கள் செல்லும் வழியில் பயணம் செய்தது T மற்றும் B... அவர்களில் வாக்கு வாதம் வந்து X , R ஐ அடிக்க Yயும் S சண்டையிட்டு R இறக்க வந்த காவலர் மற்றவர்களி கைது செய்து சிறையில் அடிக்க .. பயன் பட்ட சட்டம் பிரிவு 300 மற்றும் 302.... 

No comments: