Sunday, October 07, 2012

நிலா கவிதைகள் ....

என்னை மன்னித்து விடு நிலவு
உன்னை திருடியாக்கி விட்டேன் ....
என்னவளின் முகத்திலிருந்தே
நீ வெளிச்சம் தருகிறாய் என !

----------------------------------------------

விடிய விடிய தேடுகிறேன்
விடிந்தும் தேடுகிறேன்
இன்றாவது பிறை
பார்க்க முடியுமா?

---------------------------------------------
மாலையில் உன்னை வருணிக்கும்
எவரும் காலை எழுவது இல்லையோ ...
இன் இனிய காலை நிலவே .....
---------------------------------------------------
நீ தேய்ந்து வளர்கிறாயா?
வளர்ந்து தேய்கிறாயா?
-----------------------------------------------------
உன்னை காட்டு
உணவு ஊட்டுகிறாள்
ஒருத்தி
நான் இங்கு உன்னையே
உண்டு கொண்டு இருக்கிறேன்

------------------------------------------


No comments: