Wednesday, October 03, 2012

முன் நவீனத்துவ குப்பை வண்டி


 முதல் காட்சியிலே கதையை ஒரு வரியில் காண்பித்து விட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குனர் , குப்பை வண்டி வந்து குப்பையை அள்ளுகிறது இரவில் , ஒரு ஜென் கவிதையாக படம் ஆரம்பம்....


அதே இரவிலே கொள்ளை நடக்கிறது சில கொலைகளுடன் , குப்பைகளுக்கு பதிலாக நகைகள் ?!  ஹீரோ வரும் முன்னே வந்து விடுகிறார் வில்லன் ....

அதோ இதோ என ஹீரோவை ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வேளையில், இவன்தான் வெல்வான் என்று ஆருடம் கூறிக்கொண்டு ஒரு கேரக்டர் இவரை மாஸ்டர் என்றே அழைப்போம்.. மாஸ்டர் சொன்ன மாதிரியே நடக்கிறது .... nostradrumstic.. இந்த வார்த்தை படித்த உடனே  nostradamus  நினைவுக்கு வந்தால் ஒரு முறை கை தட்டி கொள்ளுங்கள்... பாக்கியராஜ் நினைவுக்கு வந்தால் ??... 
ஆனால் அதையும் தாண்டி ஒரு படி மேலே சென்று "Moringa oleifera" என்ற தாவரவியல் பெயருக்கும் முருங்கைக்காய் என்ற தமிழ் பெயருக்கும் உள்ள உறவை ஆராய்ச்சி செய்தீர்களானால் ஒரு ஸ்ப்ரைட் குடிக்கவும். 


புரூஸ் லீ யாக இருந்தாலும் அப்பாவுக்கு தண்ட சோறாகத்தான் காட்சியளிப்பார் என்பதை உணர்த்துவதாகட்டும் , அம்மா பாசத்தையும், தலைமுறைகள் மாறி மாறி வருவதை உணர்த்தும் தாத்தாவாகட்டும் - an interesting touch என்று தான் சொல்ல வேண்டும்...

மாஸ்டர்க்கு வாடகை பிரச்சனைக்கு உதவி செய்வதற்க்கு உயிரை பயணம் செய்து சண்டை போடும்பொழுது தான் தெரிகிறது புரூஸ் லீ யின் வீரம் , அதனால் அவர்  சிறைக்கு செல்ல காரணமாகிறார் ஹீரோயின் , அழகு பதுமைகளுக்கு எந்த வேலையும் இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாக கூடாது என்பதற்க்கு வலை போட்டு தேடப்பட்ட  ஹீரோயின் !

"சமூக பிரச்சனைக்காகதான் நீ சண்டை இடுகிறாய் " என தாத்தா வீர வசனம்போது அவர் பேசும் வசனம் பின்னால் வரும் சண்டைகளுக்கென என அறியாமல் கெக்கலிக்கின்றனர் அறிவுஜீவிகள் திரை அரங்குகளில் ....

சில பல சண்டைகளுக்கு பிறகு ஹீரோய்யினை நேரில் பார்த்து மயங்கி நிற்கையில் ஹீரோ ..... இதோ பாடலுக்கான வாய்ப்பு என்றதை அதை மிஸ் பண்ண விடாமல் , அதே நேரத்தில் .... sidekick களை பாட செய்து அதையே kick ஆக (Read some review about Inception) use செய்வது .. அட அட என்ன சொல்லுவது.. அதுவும் ஹீரோ ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்து அவர் அடுத்த அடி வைப்பதற்க்குள்!!

என வில்லன் முன்னால் டார்க் நைட் வில்லன் ஊனம் என்பதை நாசூக்காக காட்டும் இயக்குனரின் கர்வம் ,ஊரையே கொள்ளை அடிப்பவர் முகமூடி இல்லாமலும், அதை எதிர்ப்பவர் முகமூடியுடன் காட்டும் irony ஆகட்டும்..... அட அட .. சொல்வதற்க்கு நிறைய இருந்தாலும்.. இத்துடன்.... மீதியை வெள்ளித்திரையில் காண்க....விருப்பம் இல்லாவிடில் "batsman trilogy" யை பார்த்து விட்டு அமைதி காக்கவும்....












No comments: