Thursday, October 11, 2012

புகை வண்டி நிலையம்

இந்த வீதியை கடக்கையில் தான் எத்தனை வியப்புகள்... சர்வ சாதாரணமாக நாம் அனுதினமும் நடக்கும் இந்த வீதி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை விட்டு செல்கின்றது என்பதில் மறு சிந்தனை ஏதுமில்லை....

எத்தனை முகங்கள்.... எத்தனை கனவுகள் ... வெறுப்புகளோடு சிலர் ....கூவி கொண்டிருந்தனர்.. அதை கடுப்புடன் கடந்து செல்வனுக்குத்தான் எத்தனை வெறுப்பு.... இன்று கூட கடந்து செல்கையில் குமரியின் குரல் "இதை நான் சினிமாவில் தான் பார்த்து இருக்கேன் " , இவ்வளவு கூட்டம்....என்னமோ திருவிழா மாதிரி அல்லவா இருக்கிறது.... தேர் மட்டும் தான் இல்லை... சில நேரங்களில் மனிதக்கூட்டம் இந்த நிலையத்தை இழுத்து கொண்டிருக்கும் வடம் போல்...ஆனால்... நிலையம்தான் மக்களை இழுத்தும் , உமிழ்ந்தும் கொண்டு இருக்கிறது ...

காவலாளி ஒருவன் உணவருந்தும் ஜோடியை துரத்தி கொண்டு இருக்கிறான்.. அவர்கள் வீடில்லாதவர்களாக இருக்கலாம்.... இருந்தும் இங்கு வந்து அமர்ந்திருக்கலாம் .. தெரியவில்லை..ஆனால் ... கம்பீரமான காவலாளி ஒரு கனிவுடன் ... சாப்பிட்ட பிறகு காலி பண்ணி விடு.. இல்லையேல் என் மேலதிகாரி என்னை திட்டுவான் என்று கூறி கொண்டு இருந்தான். .. அவன் அவனவனுக்கு ஒவ்வொரு கவலை.... எனக்கென்ன கவலை... நான் இழந்து இருக்கிறேன்... எத்தனை மாற்றங்கள்... ஒவ்வொரு மாற்றத்திலும் பலம் கூடியதாக இருக்கிறது..... நான் விஸ்தாரமாக்கபட்டு இருக்கின்றேன்....
பலத்தை சோதிக்க இவர்களும் பெருகி கொண்டே இருக்கின்றனர்... அவன் சொல்லுகிறான் .... இவர்களை நான் உமிழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.... இல்லை நான் பாரம் தாங்காமல் அவர்களை தூக்கி எறியதான் பார்க்கிறேன்... ஆனால் இவர்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றனர் ... முன்னாள் ஒருவன் புகை எரிந்து விட்டு கடந்து செல்லுவான்.. நான் நிறம் மாறத் தொடங்குவான்..இவன் இப்பொழுது .... என் மேலும் .. எனக்கு மேலும் ... கயிறு கட்டி செல்லுகின்றான்..  இவனின் சத்தம் கூட மாறி விட்டது...

ஆதியிலே நான் இவனை
சில முறை தான்
பார்ப்பேன் அனுதினமும்...
ஆனால்.. இப்பொழுது நிமிடத்துக்கு
ஒருமுறை கடந்து செல்கிறான்
என் மீது அதிக பாரத்துடன்...
என்ன சொல்லுவது...
அவன் சொன்னது போல
இவன் என் மேல் உமிழ்ந்து செல்கிறான்...
ஒருவன் துப்பி செல்கிறான் ...ஒருவன்
அழுது புரள்கின்றான்.... ஒருவன் என்னை
கண்டும் காணாமல் ஓடி செல்கிறான்
அவனை கண்டு...நான் கண்டும் காணாமல் ..
இருக்கிறான்....

இவர்களின் பயணம் தொடரும் வரை என் பயணம் தொடருமா?


No comments: