Wednesday, October 10, 2012

திரும்பி படிக்கவும் ..

குறிப்புகள், குறியீடுகள் இவை தான் எங்கும்... ஒரு குறியீடு அதற்க்கு மேலும் மட்றுமொன்று ... இப்படியே மென்மேலும் பல குறியீடுகளால் ஆனது குறிப்பு...
ஒவ்வொரு குறிப்பும் மட்றுமொறு குறிப்பை குறுக்கீடு செய்கிறது.. இங்கு இதை குறித்து இது என்று புரியுமுன்னே கடந்து சென்று விடுகின்றன சில ....

கடந்து வந்ததில் எதை தான் சொல்வது.. நிறம் மாறும் வானம் மறையுமுன்னே சிவப்பு... நீல வானம் திடுப்பென்று கருமை காட்டி ... பிறகு கதறி அழுது கண்ணீர் விட்டு நிறமட்று.. மீண்டும் நிறம் பெற்று .. சில நேரம் ஏழு நிறம் கட்டி செல்வது எதனால் ... ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் காட்டி கல்லா காட்டும் அறிவியல் அறிஞர்கள் .... இவை அவையாகி அவை அவற்றுடன் மோதி ..இவை இவையெல்லாம் வருகின்றன என்றாலும்.. அவையெல்லாம் அறிய பல குறியீடுகள் குறிப்புகளை  தாண்டினாலும்....மிஞ்சி நிற்பது எதற்காக எதனால்.... விட்டு விடு .. இந்த வெங்காயங்களை என்றால்......வெங்காய விளக்கங்கள் வேறு வேறாக வருகின்றன... அவை நிறுவனங்களையும்... அவற்றை காப்பாற்றவும் அழித்தழிகின்றன.. குய்யோ முய்யோமென்று  கூவினால்.... குயில் காக்கையாகிடுமா என்ன ... காக்கைக்கு சதை என்ன தசை என்ன... கொத்தி விட்டு தாவுகின்றது... மரங்களுக்கிடையே மின்சார ஊஞ்சலில் மரணம் பெற்று ..கூட்டாக கத்தி தீர்க்கின்றன காகங்கள்...கூழாங்கல் தேடுகின்றேன்... காக்கை நீராற்ற அல்ல..தூரத்திலே .. ஆகாய விமானம் ஒன்று போட்டி  போட்டு பறக்கின்றது  புறாவுடன்.. சமாதான புறா ஒன்று சண்டையிட்டு வெல்கின்றது... வெட்கி தவிக்கும் விமானம் மேகத்திலே சிக்கி தவிக்க....

சில்லென்ற காற்று செவி மோதி செல்கிறது ...எத்திசை காற்றும் மழை தரும் என்று குறிப்பு சொன்னது.. எது எத்திசை என்று அறியாமல்... எத்திக்கும் நம் திக்கே என்று கூவி கொண்டு இருந்தான் தலைவன் ஒருவன்.....


No comments: