எதிலும் ஆனந்தமாக
திளைத்திருக்க
உன்னால் மட்டுமே
முடிகிறது....
ஓடும் போதும்
முட்டி மோதி
கீழ் வீழும்போதும்
எழுந்து மறுபடியும்
அதை தொடரும்போதும்
சிரிக்கும்போதும்
கவனத்தை ஈர்க்க
கண்ணீர் சிந்தும்பொழுதும்
எப்பொழுதும் ஆனந்தம் ....
உன்னால் மட்டும்
எப்படி குழந்தை
மனமே? அல்லது மனமில்லாத
நிலையோ நானறியேன் !
No comments:
Post a Comment