Thursday, October 11, 2012

ஓவியம்

ஆகாயம் அதன்
போக்கில் வரைந்து
செல்லுது ஓவியங்களை ..

சில நேரங்களில்
பாய்ந்து செல்லும்
பறவைகள்
காணுமோ என்னமோ ...
அவை பாட்டாக
வடிப்பது எதை ?

 .... ஓவியங்கள்
ஒன்றோடொன்னு மோதி
பாய்ந்து சென்ற
பறவைகளை
குருடாக்கி...
அழுது அழிக்கின்றன
ஓவியங்களை ...
இப்பொழுது ஆகாயம் மீண்டும்
வரைய ஆரம்பிக்கிறது ....

இக்கதை தொன்று
தொட்டு தொடர்வதாக
அறிவிக்குறது
மேகங்களிலே தோன்றிய
சாலமன் காலத்து
வளர்ப்பொன்று..

அவை மேலும் தொடர்கின்றது ...
கண்ணீர் கண்ணீர் உடன் சேர்ந்து
பெரும் நீராக மாறி ...காற்றாக
 ...ஆகாயத்தின் தூரிகையுடன்
ஒட்டி உறவாடி.. பட்டுத் தெரிக்கிறது
மலை மீது மழையாக ...

எச்சங்கள் பாயாமல் பதுங்கி
ஊற்றாக மாறி .. மீண்டும்
மீண்டு பாய்கிறது
கண்ணீருடன் கலந்திட...
போகும் வழியெல்லாம்
மாற்றம் தருகின்றன ...

குருட்டு தவளை
ஒன்று கூக்குரலிடுகிறது
சத்தங்கள் நடுசாமத்தின்
அமைதியை குலைக்கிறது....

இப்பொழுது சிவப்பு
நிறம் எடுத்து மீண்டும்
நிறம் மாறுகிறது ....
ஆதவன் ஒளி
பட்டு காற்றாய்
மாறி மீண்டும்...







No comments: