இறுக்கமான சூழ்நிலை , எங்கு காணினும் தலைகள் , இப்போதோ அப்போதோ என்று ஆயத்தமாக நான் ..தன்னந்தனியனாக பார்த்து கொண்டு இருக்கின்றேன், சஞ்சயனுக்கு கூட துணை இருந்தது !
காரணங்களை பார்த்து கொண்டு இருந்தால் தருணங்கள் இல்லை , இப்போது இன்னும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன் , உக்கிரம் கூடி இருந்தது ....
நான்கு புறங்களிலும் , கூட்டம் கூட்டம் ஆக , வெவ்வேறு உருவங்களில் , விலங்குகள் கூட இருந்தன , மனிதர்கள் விலங்குகளாய் , விலங்குகள் மனிதர்களாகவும் கூட மாறத் தொடங்கி இருந்தனர் !
விஸ்வரூபங்களுக்கும் விநோத ரூபங்களுக்கும் பஞ்சமில்லை, எத்தனை கீதை அரங்கேறியதோ , எதுவும் காதில் விழவில்லை , காதை பிளக்கும் சத்தம் மட்டுமே , அவ்வப்போது ஒளி கீற்று ....
காற்று காற்று வேகத்தில் வந்தது!
2 comments:
Is this incomplete or u r done?
yeah.. done..Incomplete in the sense.. I have shortened it ;-)
Post a Comment